Noisy-le-Sec - பெண்ணை தாக்கிய நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு!!

PARIS TAMIL  PARIS TAMIL
NoisyleSec  பெண்ணை தாக்கிய நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு!!

பெண் ஒருவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 
 
சம்பவம், இன்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 23 ஆம் திகதி Noisy-le-Sec இல் இடம்பெற்றுள்ளது. நண்பகலுக்கி சற்று பின்னதாக 2 மணி அளவில், காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள வீட்டுக்குள் பெண் ஒருவர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி இரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்துள்ளார். அவரை தாக்கிய நபர் கைகளில் சமையலறை கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்துக்கொண்டிருந்துள்ளார். குறித்த நபரை கத்தியை எறிந்துவிட்டு சரண் அடையும் படி காவல்துறையினர் பணித்தனர். 
 
ஆனால் அவர் காவல்துறையினரின் கோரிக்கையை உதாசீனப்படுத்திவிட்டு, தொடர்ந்து மிரட்டலில் ஈடுபட்டார். இதனால் காவல்துறையினர் வேறு வழி இல்லாமல் இரண்டு தடவைகள் தாக்குதலாளியை நோக்கி துப்பாக்கியை முழக்கினர். பின்னர் காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்குட்படுத்தியுள்ளனர். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

மூலக்கதை