ஓய்வு கால சேமிப்பில் இந்தியர்கள் எப்படி?
இந்தியாவில் உள்ள பணிபுரியும் பிரிவினர் மத்தியில், 3ல் ஒருவர் தான் ஓய்வு காலத்திற்கு என, திட்டமிட்டு சேமித்து வருவது தெரிய வந்துள்ளது.
எச்.எஸ்.பி.சி., நிறுவனம், ‘ஓய்வு காலத்தின் எதிர்காலம்’ எனும் பெயரில், இந்தியா உள்ளிட்ட, 16 சர்வதேச நாடுகளில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்தியாவில், இந்த ஆய்வில், 1,054 பேர் பங்கேற்றனர். இந்தியர்களில் பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும் என, நம்புகின்றனர். ஓய்வு காலத்தில், 68 சதவீதம் பேர் பிள்ளைகள் ஆதரவு கிடைக்கும் என, நம்புகின்றனர்.
உலக அளவில், பணியில் இருக்கும் பிரிவினரில், 50 சதவீதத்தினர் எதிர்கால வாழ்க்கைக்கு திட்டமிடுவதை விட, தற்போது நன்றாக வாழ்க்கையை அனுபவிப்பதில் கவனம் செலுத்துகின்றனர் என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.