பொய் சொல்வதை நிறுத்துங்கள் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்: ரபேல் குறித்து ராகுல் டிவிட்

தினகரன்  தினகரன்
பொய் சொல்வதை நிறுத்துங்கள் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்: ரபேல் குறித்து ராகுல் டிவிட்

புதுடெல்லி: ‘ரபேல் விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என ராகுல் காந்தி கூறி உள்ளார்.பிரான்சின் முன்னாள் அதிபர் ஹாலண்டே சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பிறகு, ரபேல் போர் விமான விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக  காங்கிரஸ், பாஜ தலைவர்களிடையே கடும் வார்த்தை மோதல் நிலவி வருகிறது. ஹாலண்டே முன்னுக்கு பின் முரணாக பேசுவதாகவும், அவருக்கும் ராகுலுக்கும்  ரகசிய தொடர்பு இருப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று கருத்து தெரிவித்தார்.இதற்கு பதிலளிக்கும் விதமாக ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘பாதுகாக்க முடியாத விஷயத்தை பாதுகாப்பதற்காக, இரண்டு உண்மைகள் அல்லது  பொய்களை, போலியாக கோபத்துடன் சேர்த்து பின்னும் திறமைதான் அருண் ஜெட்லியின் சிறப்பு. பிரதமர், நிதியமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் பொய்  சொல்வதை நிறுத்த வேண்டும். ரபேல் ஊழலில் முழுஉண்மை வெளிப்பட நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும்’ என கூறியுள்ளார்.

மூலக்கதை