கடலில் மூழ்கிய இந்திய வீரரை மீட்கும் பணி தீவிரம்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த படகு விபத்தில் மூழ்கிய இந்திய வீரரை மீ்ட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் கோல்டன் குளோப் பந்தயத்தில் இந்தியாவின் கடற்படை கமாண்டர் அபிலேஷ் டோமி கலந்து கொண்டார். பந்தயத்தின் போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்தது. இச்சம்பவத்தி்ல அபிலோஷ் டோமி நீரில் மூழ்கினார். அவரை மீட்கும் பணியில் பிரான்ஸ், இங்கிலாந்து கடற்படை வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.