மத உணர்வை புண்படுத்தும் பட டைட்டில் சர்ச்சை: சல்மான்கான் மீது போலீசில் புகார்

தினகரன்  தினகரன்
மத உணர்வை புண்படுத்தும் பட டைட்டில் சர்ச்சை: சல்மான்கான் மீது போலீசில் புகார்

முஸாப்பர்புர்: புதிய படத்துக்கு மதஉணர்வை புண்படுத்துவதுபோல் டைட்டில் வைத்ததாக நடிகர் சல்மான்கான் மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தி நடிகர் சல்மான்கான் ‘லவ்ராத்ரி’ பெயரில் புதிய இந்தி படம் தயாரிக்கிறார். ஆயுஷ் சர்மா, வாரினா ஹுசைன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அபிராஜ் மின்யவாலா இயக்குகிறார். இப்படத்தின் டைட்டில் இந்துக்களின் நவராத்திரி விழாவை கிண்டல் செய்வதுபோல் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த டைட்டிலுக்கு தடை விதிக்க வேண்டும், சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸரில் ஆபாச காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது என்று சுதிர்குமார் ஓஜ்ஹா என்பவர் கடந்த வாரம் சப் டிவிஷனல் ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது சம்பந்தமாக போலீசில் புகார் தரும்படி உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பீகாரில் மிதன்புரா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தை வரும் அக்டோபர் 5ம் தேதி வெளியிட உள்ளதாகவும், லவ்ராத்ரி என்ற டைட்டில் லவ்யாத்ரி என மாற்றப்பட்டிருப்பதாகவும் தனது இணைய தள பக்கத்தில் சல்மான்கான் தெரிவித்திருக்கிறார்.

மூலக்கதை