நடிகர் கருணாசுக்கு அக். 5 ம் தேதி வரை நீதிமன்ற காவல்

தினமலர்  தினமலர்
நடிகர் கருணாசுக்கு அக். 5 ம் தேதி வரை நீதிமன்ற காவல்

சென்னை : சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில், நடிகரும் மற்றும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் பேசினார். முதல்வர் பழனிசாமி, தன்னை பார்த்து பயப்படுவதாகவும், இந்த அரசு அமைய தான் முக்கிய பங்கு வகித்ததாக கருணாஸ் கூறியிருந்தார்.

அதோடு மட்டுமல்லாது, காவல்துறை அதிகாரியிடமும், யூனிபார்மை கழற்றிவிட்டு வந்து மோத தயாரா என்று சவாலும் விடுத்திருந்தார்.

இதுதொடர்பாக, 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.இதனிடையே, சாலிகிராமம் வீட்டில் இருந்த அவரை, போலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.

மூலக்கதை