திருநகர், ஹார்விபட்டி, அவனியில் நிரந்தர சந்தை அமையுமா
திருப்பரங்குன்றம்:மதுரை திருநகர், ஹார்விபட்டி, அவனியாபுரத்தில் நிரந்தர தினசரி காய்கறி சந்தை அமைக்க வேண்டும்.திருநகரில் வெள்ளி, மொட்டை மலையில் செவ்வாய், ஹார்விபட்டியில் சனி, அவனியாபுரத்தில் ஞாயிறு அன்று ரோட்டில் காய்கறி சந்தை நடக்கிறது. மற்ற நாட்களில் காய்கறி வாங்க திருப்பரங்குன்றம், நகர் பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது. அல்லது கடைகளில் கூடுதல் விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.திருப்பரங்குன்றத்தில் தண்டவாள பகுதி மற்றும் ரயில்வே ஸ்டேஷன் அருகே மக்கள் கடக்கும் பாதை அடைக்கப்பட்டதால் சந்தைக்கு செல்ல மிகுந்த சிரமம் அடைகின்றனர். அவனியாபுரம் சந்தையால் கொற்றகுளம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கிறது. சந்தை முடிந்ததும் காய்கறி கழிவுகளை ரோட்டிலேயே விட்டுச் செல்கின்றனர். இதை தவிர்க்க மூன்று இடங்களிலும் நிரந்தர சந்தை அமைக்க வேண்டும்.