உம்ரா விசாவில் சவுதி அரேபியா முழுவதும் பயணிக்கலாம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
உம்ரா விசாவில் சவுதி அரேபியா முழுவதும் பயணிக்கலாம்!

 

உம்ரா விசாவில் சவுதி அரேபியா முழுவதும் பயணிக்க, அந்நாட்டு மன்னர் அனுமதி அளித்துள்ளதாக அகில இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர் தெரிவித்து உள்ளார்.  அகில இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உம்ரா செய்வதற்கு சவுதி அரேபியா செல்பவர்கள் மக்காவுக்கும் மதினாவுக்கும் மட்டும்தான் செல்ல முடியும். வேறு எந்த நகரத்துக்கு உள்ளேயும் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.  மக்காவுக்கு அருகில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடமான தாயிப் நகரத்துக்குள் அரசுக்கு தெரியாமல்தான் செல்லும் நிலை இருந்தது.  எப்படியோ அதிகாரிகளுக்கு தெரிந்து விட்டால் எல்லையிலேயே திருப்பி அனுப்புவதும்,  பலர் ஏமாற்றத்துடன் திரும்புவதும் வழக்கத்தில் இருந்தது. இந்த நிலையில், உம்ரா விசாவில் சவுதி அரேபியா முழுவதும் பயணிக்க அந்நாட்டு மன்னர் அனுமதி அளித்துள்ளார். மன்னரின் இந்த புதிய அறிவிப்பால் இனி உம்ரா விசாவில் மக்கா செல்பவர்கள் தாயிப் நகரத்துக்குள் மட்டுமல்லாமல் சவுதி அரேபியா முழுவதிலும் தங்கு தடையின்றி போய் வரலாம்.  இதற்காக அந்நாட்டு மன்னருக்கு அகில இந்திய ஹஜ் அசோசியேசன் சார்பிலும், அனைத்துலக இஸ்லாமிய சமூகத்தார்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

உம்ரா விசாவில் சவுதி அரேபியா முழுவதும் பயணிக்க, அந்நாட்டு மன்னர் அனுமதி அளித்துள்ளதாக அகில இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர் தெரிவித்து உள்ளார். 


அகில இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உம்ரா செய்வதற்கு சவுதி அரேபியா செல்பவர்கள் மக்காவுக்கும் மதினாவுக்கும் மட்டும்தான் செல்ல முடியும். வேறு எந்த நகரத்துக்கு உள்ளேயும் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.


 மக்காவுக்கு அருகில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடமான தாயிப் நகரத்துக்குள் அரசுக்கு தெரியாமல்தான் செல்லும் நிலை இருந்தது.  எப்படியோ அதிகாரிகளுக்கு தெரிந்து விட்டால் எல்லையிலேயே திருப்பி அனுப்புவதும்,  பலர் ஏமாற்றத்துடன் திரும்புவதும் வழக்கத்தில் இருந்தது.


இந்த நிலையில், உம்ரா விசாவில் சவுதி அரேபியா முழுவதும் பயணிக்க அந்நாட்டு மன்னர் அனுமதி அளித்துள்ளார். மன்னரின் இந்த புதிய அறிவிப்பால் இனி உம்ரா விசாவில் மக்கா செல்பவர்கள் தாயிப் நகரத்துக்குள் மட்டுமல்லாமல் சவுதி அரேபியா முழுவதிலும் தங்கு தடையின்றி போய் வரலாம். 


இதற்காக அந்நாட்டு மன்னருக்கு அகில இந்திய ஹஜ் அசோசியேசன் சார்பிலும், அனைத்துலக இஸ்லாமிய சமூகத்தார்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில்கூறப்பட்டுள்ளது.

 

மூலக்கதை