மின்சாரம் தடைப்பட்டு இருளில் மூழ்கிய ஓர்லி விமான நிலையம்! - தாமதமான விமானங்கள்!!
இன்று சனிக்கிழமை காலை ஓர்லி சர்வதேச விமான நிலையத்தில் மின்சாரத்தடை ஏற்பட்டு, முற்று முழுதாக இருளில் மூழ்கியது.
காலை 7.45 மணிக்கு மின்சாரம் தடைப்பட்டது. மின்சார வழங்கியில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த தடை ஏற்பட்டதாக சில நிமிடங்களின் பின்னர் Aéroports de Paris அறிவித்தது. இதனால் விமானத்துக்குள் பொருட்களை ஏற்றவோ இறக்கவோ முடியாமல் போனது. தவிர. பயணிகளின் உடமைகள் சோதனை இயந்திரத்துக்குள் சிக்கிகொண்டது. விமான நிலையத்தின் இரண்டாம் மண்டபம் முற்று முழுதாக இருளில் மூழ்கியது. பயணிகள் பலர் தரித்து நின்றனர்.
தவிர, விமானங்கள் புறப்படத் தாமதமானது. வந்திறங்கிய விமானத்தில் இருந்தும் பயணிகள் கீழே இறங்க தாமதமானது.