நாளை காலை 8 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலையில் 3 பேர் கொண்ட குழு ஆய்வு: ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி

தினகரன்  தினகரன்
நாளை காலை 8 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலையில் 3 பேர் கொண்ட குழு ஆய்வு: ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்த 3 பேர் கொண்ட குழு இன்று மாலை தூத்துக்குடி வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு வருகை பற்றி தூத்துக்குடி ஆட்சியர் பேட்டியளித்துள்ளார். நாளை காலை 8 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடக்கிறது. 3 பேர் குழு ஆய்வினை மேற்கொள்ள உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஞாயிறு காலை 11.30 மணிக்கு பாலிடெக்னிக் கல்லூரியில் குழுவை சந்தித்து பொதுமக்கள் மனு அளிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை