தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமருக்கு எம்பி கனிமொழி கடிதம்
சென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். 2013ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி அன்றைய பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் என கனிமொழி தெரிவித்துள்ளார். 2013ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாம் கேள்வி எழுப்பியதையும் நினைவு கூர்ந்து கடிதம் எழுதியுள்ளார். பூமத்திய ரேகை அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைத்தால் பெரும் பயன் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.