தடுப்பு முகாமில் அகதி தற்கொலை!!

PARIS TAMIL  PARIS TAMIL
தடுப்பு முகாமில் அகதி தற்கொலை!!

31 வயதுடைய அகதி ஒருவர், நேற்று வெள்ளிக்கிழமை அகதிகள் தடுப்பு முகாமில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 
 
Toulouse-Cornebarrieu (Haute-Garonne) பகுதியில் உள்ள தடுப்பு முகாமில் இருந்து அகதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 31 வயதுடைய துனிசிய நாட்டு குடியுரிமை கொண்ட நபரே தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடந்த ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் குறித்த Centre de rétention administrative (CRA) அகதிகள் தடுப்பு முகாமுக்கு அவர் அழைத்துவரப்பட்டிருந்தார். இந்நிலையில் 17.40  மணி அளவின் அவனது சடலம் அறையில் தொங்கிய நிலையில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. 
 
குறித்த Centre de rétention administrative அகதிகள் அடுப்பு முகாமில், கடந்த 2017 ஆம் ஆண்டு 1,069 அகதிகள் வரவழைக்கப்பட்டு வெவ்வேறு பிராந்தியங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இந்த முகாம் திறக்கப்பட்டதில் இருந்து, அகதி ஒருவர் தற்கொலை செய்வது இதுவே முதன்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை