ரபேல் விவகாரத்தில் பிரான்ஸ் நிறுவனம் விளக்கம்

தினமலர்  தினமலர்
ரபேல் விவகாரத்தில் பிரான்ஸ் நிறுவனம் விளக்கம்

பாரீஸ்: ரபேல் போர் விமானம் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையே நடந்த ஒப்பந்தம் மட்டுமே. பிரான்சின் டசல்ட் விமான தயாரிப்பு நிறுவனம் ரிலையன்சை கூட்டு நிறுவனமாக சேர்த்தது என்றும் , இதில் இந்திய அரசுக்கு சம்பந்தம் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் டசல்ட் நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
ரபேல் விமானம் மற்றும் இதற்கான உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கென இந்தியாவில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி நாக்பூரில் தொழிற்சாலை துவக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது எங்களின் முடிவு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை