தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடம்

தினகரன்  தினகரன்
தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடம்

டெல்லி: தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது. உலகில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த ஆய்வறிக்கையில் ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு அடுத்தபடியாகத் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டில் இந்தியாவில் 860 தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளது என்றும் ஜம்மு-காஷ்மீரில் முந்தைய ஆண்டைவிட தீவிரவாதத் தாக்குதல் 24 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், உயிரிழப்பு 89 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.மேலும் 2015-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் தான் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 3-வது நாடாக இருந்தது. இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்களில் 53 விழுக்காடு மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்படுவதாகவும், உலக அளவில் ஐஎஸ், தாலிபான், அல் சபாப் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மாவோயிஸ்ட் இயக்கம் 4-வது பெரிய தீவிரவாத இயக்கமாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மூலக்கதை