பரிஸ் - வீதியில் இருந்த குழிக்குள் விழுந்த நபர் - உயிருக்கு போராட்டம்!!
இன்று வெள்ளிக்கிழமை நபர் ஒருவர் வீதியில் இருந்த குழிக்குள் விழுந்துள்ளார். உயிருக்கு போராடும் நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை காலை 7.50 மணிக்கு பரிஸ் ஆறாம் வட்டாரத்தின் Saint-Sulpice பகுதியில் அமைந்துள்ள Mezieres வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியில் சென்ற நபர் ஒருவர் குழிக்குள் தவறி விழுந்துள்ளார். ஒரு சதுரமீட்டர் அகலமும், பத்து மீட்டர் ஆழமும் கொண்ட அந்த குழிக்குள் விழுந்த நபர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடும் நிலையில் மீட்கப்பட்டு, 13 ஆம் வட்டாரத்தில் உள்ள Pitié-Salpêtrière மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். குறித்த நபர் குழிக்குள் விழுந்தது எப்படி என விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.