ஒரே வாரத்தில் 3 பங்கு வெளியீடு; ரூ.2,264 கோடி திரட்ட திட்டம்

தினமலர்  தினமலர்
ஒரே வாரத்தில் 3 பங்கு வெளியீடு; ரூ.2,264 கோடி திரட்ட திட்டம்

புதுடில்லி : அடுத்த வாரம், மூன்று நிறு­வ­னங்­கள், புதிய பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்கி, 2,264 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்­டு உள்ளன.

சர்­வ­தேச வர்த்­த­கப் பதற்­றம், கச்சா எண்­ணெய் விலை­யேற்­றம், டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு சரிவு உள்­ளிட்ட கார­ணங்­க­ளால், பங்­குச் சந்தை தொடர்ந்து சரி­வைக் கண்டு வரு­கிறது. இந்­நி­லை­யில், இந்த மூன்று நிறு­வ­னங்­களின் புதிய பங்கு வெளி­யீ­டு­க­ளுக்கு எந்த அள­விற்கு வர­வேற்பு இருக்­கும் என்­பது, அடுத்த வாரம் தான் தெரி­யும்.

நடப்பு வாரம், பொதுத் துறை­யைச் சேர்ந்த, இர்­கான் இண்­டர்­நே­ஷ­னல் நிறு­வ­னத்­தின் புதிய பங்கு வெளி­யீட்­டிற்கு நல்ல வர­வேற்பு காணப்­பட்­டது. பங்­கு­கள் வேண்டி, 9.9 மடங்கு விண்­ணப்­பங்­கள் குவிந்­தன. அடுத்த வாரம், கார்­டன் ரீச் ஷிப் பில்­டர்ஸ் அண்டு இன்­ஜி­னி­யர்ஸ் நிறு­வ­னத்­தின் பங்கு வெளி­யீடு, 24ம் தேதி துவங்கி,26ல் முடி­வ­டை­கிறது.

பங்கு ஒன்­றின் விலை, 115 – 118 ரூபாய் என, நிர்­ண­யிக்­கப்­பட்­டு உள்­ளது. வங்கி சாரா நிதி நிறு­வ­ன­மான, ‘ஆவாஸ் பைனான்­சி­யர்ஸ்’ பங்கு விற்­பனை மூலம், 1,734 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது. இப்­பங்கு வெளி­யீடு, 25 – 27வரை நடை­பெற உள்­ளது. அடுத்து, தினேஷ் இன்­ஜி­னி­யர்ஸ் நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டிற்கு வரு­கிறது. இந்­நி­று­வ­னம், பங்கு விலையை, 183 – 185 ரூபாய் என, நிர்­ண­யித்­துள்­ளது.

ஒரு கோடி பங்­கு­களை விற்­பனை செய்து, அதி­க­பட்­சம், 185 கோடி ரூபாய் திரட்ட, இந்­நி­று­வ­னம் திட்­ட­மிட்­டுள்­ளது. நடப்பு செப்­டம்­ப­ரில், நான்கு நிறு­வ­னங்­கள், புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், 2,734 கோடி ரூபாய் திரட்­டும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. கடந்த ஆண்டு, இதே மாதத்­தில், ஏழு நிறு­வ­னங்­கள், பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்கி, 16,665 கோடி ரூபாய் திரட்­டி­யது குறிப்­பி­டத்­தக்­கது.

மூலக்கதை