கன்னியாஸ்திரி பாலியல் புகாரில் சிக்கிய ஜலந்தர் பிஷப் பிராங்கோ கைது

தினகரன்  தினகரன்
கன்னியாஸ்திரி பாலியல் புகாரில் சிக்கிய ஜலந்தர் பிஷப் பிராங்கோ கைது

கொச்சி: பாலியல் புகாரில் சிக்கிய ஜலந்தர் பிஷப் பிராங்கோ முலாக்கல் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாக பிஷப் பிராங்கோ மீது புகார் தெரிவிக்கப்பட்டது. கொச்சியில் 3 நாள் விசாரணைக்கு பிறகு பிராங்கோவை கேரளா போலீஸ் கைது செய்துள்ளது. பிஷப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று பிராங்கோ கைதானார். கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பி‌ஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார். கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். பிராங்கோ முல்லக்கல் இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியதன் பெயரில் அவர் ஆஜரானார். கடந்த 3 நாளாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில் இன்று அவர் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, ஜலந்தர் பிஷப் பொறுப்பில் இருந்த பிராங்கோவை கத்தோலிக்க தலமையகமான வாடிகன் பதவி நீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை