டால்பினை கொடுமைப் படுத்துவதா? த்ரிஷாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

தினமலர்  தினமலர்
டால்பினை கொடுமைப் படுத்துவதா? த்ரிஷாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

நடிகை த்ரிஷா தனது சொந்த பயணமாக துபாய்க்கு சென்றிருந்தபோது அங்குள்ள கடற்கரை சொகுசு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். அந்த ஓட்டலின் நீச்சல் குளித்தில் குறிப்பிட்ட நேரத்தில் டால்பின்களோடு விளையாடலாம், இதற்கு லட்சக் கணக்கில் கட்டணம். நடிகை த்ரிஷா டால்பினோடு விளையாடி, அப்போது எடுக்கப்பட்ட படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.

இதற்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. விலங்கு நல ஆர்வலர்கள் த்ரிஷாவை திட்டி தீர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் ஐதரபாத்தை சேர்ந்த விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி பத்மஜா த்ரிஷாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

கடலில் சுதந்திரமாக வாழ வேண்டிய டால்பின்களை மனிதர்கள் தங்கள் இஷ்டத்துக்கு அடைத்து வைத்து வளர்ப்பது தவறானது. மனிதர்கள் விளையாடுவதற்கு டால்பின்கள் பொம்மைகள் அல்ல. அது இயல்பில் மனிதர்களோடு விளையாடும் விலங்கும் அல்ல. விளையாட்டு என்ற பெயரில் அதனை கொடுமைப்படுத்துகிறார்கள். மனிதர்கள் டால்பினோடு விளையாடுவது கொடுமையானது என்று தெரிவித்திருக்கிறார்.

த்ரிஷா விலங்குகளை பாதுகாக்கும் பீட்டா அமைப்பில் உள்ளார். அதோடு விலங்குகள் பாதுகாப்புக்காக அவ்வப்போது குரல் எழுப்பியும் வருகிறார். அவரே இப்படிச் செய்யலாமா என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

மூலக்கதை