'வாட்ஸ் ஆப்' வதந்தி; அரசு நடவடிக்கை
புதுடில்லி: 'வாட்ஸ் ஆப்' தகவல் பரிமாற்ற செயலியின் மூலம், வதந்திகள் பரவாமல் தடுக்கவும், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவோரை கண்டறியும் வகையிலும், தகுந்த நடவடிக்கை எடுக்கும் படி, அந்த நிறுவனத்திற்கு, மத்திய அரசு ஏற்கனவே, இரண்டு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
இந்நிலையில், 'வாட்ஸ் ஆப்'பில், முதல் தகவலை யார் அனுப்பியவர் என்பதை கண்டறியும் வகையில், பாதுகாப்பு அம்சங்களை உறுதிபடுத்துவது குறித்து, விரைவில், மூன்றாவது நோட்டீஸ் அனுப்பும் முயற்சியில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.