பிரதமர் மோடியை போல் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம் என பொய் வாக்குறுதி அளிக்க மாட்டேன் : ராகுல்காந்தி

தினகரன்  தினகரன்
பிரதமர் மோடியை போல் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம் என பொய் வாக்குறுதி அளிக்க மாட்டேன் : ராகுல்காந்தி

ஜெய்ப்பூர்: பிரதமர் மோடியை போல் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம் என பொய் வாக்குறுதியை சொல்லி வாக்கு கேட்க மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் துர்காபூரில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கிய கறுப்பு பணத்தை மீட்டு வந்து மக்கள் அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்று மோடி வாக்குறுதி அளித்ததை ராகுல் நினைவு கூர்ந்தார். உள்நாட்டிலேயே தயாரிப்போம் என்ற முழக்கத்துடன் மேக் இன் இந்தியா திட்டத்தை மோடி கொண்டு வந்ததாக ராகுல் கூறினார். ஆனால் இந்தியாவில் உள்ள பொருட்கள் அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டதாக அவர் சாடியுள்ளார். சீனாவில் நாள் ஒன்றுக்கு 50,000 பேருக்கு உருவாக்கப்படுகிறது என்று ராகுல்காந்தி கூறினார். ஆனாலி் இந்தியாவில் ஒரு நாளில் 450 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்புகள் உருவாகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று மோடி பேசுவது பொய் வாக்குறுதி என ராகுல் கூறியுள்ளார்.

மூலக்கதை