3 பேரைச் சுட்டுக்கொன்றதுடன் தன்னையும் மாய்த்துக்கொண்ட பெண்

PARIS TAMIL  PARIS TAMIL
3 பேரைச் சுட்டுக்கொன்றதுடன் தன்னையும் மாய்த்துக்கொண்ட பெண்

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலக் கிடங்கு ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் பெண், 3 பேரைச் சுட்டுக்கொன்றதுடன் தன்னையும் மாய்த்துக்கொண்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

 
சம்பவம், பால்டிமோருக்கு (Baltimore) வடகிழக்கே சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெர்ரிமேனில் (Perryman), உள்ளூர் நேரப்படி நேற்று காலை 9 மணியளவில் நடந்தது.
 
சம்பவத்தில் மூவர் மாண்டனர், வேறு சிலர் காயமடைந்ததனர்.
 
வேலையிடத்தில் ஏற்பட்ட மனக்குறையால் அந்தப் பெண் துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
 
சந்தேக நபர் குறித்த விவரங்களோ, தாக்குதலுக்கான காரணமோ வெளியிடப்படவில்லை.
 
சந்தேகிக்கப்படும் பெண், தன்னையும் மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் இருமுறை தனது தலையில் சுட்டுக்கொண்டதாக CNN தொலைக்காட்சி தெரிவித்தது.
 
அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பதை அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது.
 
இருப்பினும், பெண்கள் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவது 5 விழுக்காட்டுக்கும் குறைவு என்பதை கவனிப்பாளர்கள் சுட்டினர். 

மூலக்கதை