சென்னை ஓபன் டென்னிஸ் மீண்டும் சென்னைக்கு வரும் : விஜய் அமிர்தராஜ் உறுதி

தினகரன்  தினகரன்
சென்னை ஓபன் டென்னிஸ் மீண்டும் சென்னைக்கு வரும் : விஜய் அமிர்தராஜ் உறுதி

சென்னை: ‘‘சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் 2020ம் ஆண்டுக்குள் மீண்டும் சென்னையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் புதிய தலைவர் விஜய் அமிர்தராஜ் கூறினார். தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு சென்னையில் நேற்று நடந்தது. இதில் சங்கத்தின் புதிய தலைவராக முன்னாள் சர்வதேச டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு டென்னிஸ் சங்க வரலாற்றில் விளையாட்டு வீரர் ஒருவர் தலைவர் பொறுப்புக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் அமிர்தராஜ், ‘‘தமிழ்நாட்டில் டென்னிஸ் விளையாட்டை பிரபலப்படுத்துவதிலும் புதிய வீரர்களை உருவாக்குவதிலும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் தீவிரமாக செயல்படும். இதற்காக முன்னாள் சர்வதேச டென்னிஸ் வீரர்களை கொண்ட காட்சி போட்டிகள் நடத்தப்படும். சென்னையில் டென்னிஸ் பயிற்சி பெற போதுமான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இதுபோன்ற கட்டமைப்பு வசதிகள் மற்ற மாவட்டங்களிலும் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சென்னையில் இருந்து, வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்ட சென்னை ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி 2020க்குள் சென்னையில் மீண்டும் நடத்தப்படும்’’ என்றார்.

மூலக்கதை