காயத்தால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய 3 இந்திய வீரர்கள்

தினகரன்  தினகரன்
காயத்தால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய 3 இந்திய வீரர்கள்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியில் காயம் காரணமாக 3 வீரர்கள் விலகியுள்ளனர். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் லீக் சுற்றில் பங்கேற்ற 2 போட்டிகளிலும் வென்று இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை சூப்பர் 4 சூற்று தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியில் அக்சர் பட்டேல், சர்துல் தாகூர், பாண்டியா ஆகியோர் விலகியுள்ளனர். இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக தீபக் சகாரும், அக்சர் படேலுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவும், சர்துல் தாகூருக்கு பதிலாக சித்தார்த் கவுலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  ஐக்கிய அரபு அமீரகத்தில் வெப்பம் அதிகளவில் உள்ளது. இது போன்ற சமயங்களில் வீரர்கள் அதிகப்படியான நீர் ஆகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். கடுமையான வெயிலில் விளையாடுவதால் வீரர்களின் உடலில் இருந்து நீர் சத்து வெளியேறி விடும். இதனால் தசைப்பிடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். பாண்டியாவுக்கு அப்படிப்பட்ட பிரச்சினை தான் ஏற்பட்டது. விரைவில் சரியாகிவிடும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை