எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததால் ஆத்திரம் காதல் தம்பதியை கொல்ல முயற்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததால் ஆத்திரம் காதல் தம்பதியை கொல்ல முயற்சி

திருமலை: காதல் திருமணம் செய்த மகளையும், அவரது கணவனையும் வெட்டிக் கொல்ல முயன்ற பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டார்.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள எஸ். ஆர். நகரை சேர்ந்தவர்கள் மாதவி, சந்தீப்.

இருவருக்கும் இடையே அங்குள்ள கல்லூரியில் படித்தபோது காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சந்தீப்புக்கு நட்சத்திர ஓட்டலில் வேலை கிடைத்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

இருவரும் வேறுவேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், மாதவியின் தந்தை மோகனாச்சாரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் மாதவியின் தாயார், மகளின் காதலுக்கு ஆதரவு தெரிவித்தாராம்.

இந்நிலையில் கடந்த 12ம் ேததி மாதவியின் தாயார் மற்றும் சகோதரர்கள் முன்னிலையில் இருவரும் கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதையறிந்த மோகனாச்சாரி, மகளை காணவில்லை என எஸ். ஆர். காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் மாதவி, சந்தீப் ஆகியோரை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்தனர். அதில் 2 பேரும் காதல் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் இருவரும் மேஜர் என்பதால் போலீசார், அவர்களது பெற்றோரை வரவழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். இதையடுத்து மோகனாச்சாரி, மாதவிக்கு போன் செய்து பாசமாக பேசியுள்ளார்.

அதேபோல் நேற்றும் மாதவிக்கு போன் செய்து, ‘உனக்கும், மாப்பிள்ளைக்கும் புத்தாடைகள் வாங்கி தருகிறேன், எர்ரகட்டாவில் உள்ள துணிக்கடைக்கு வாருங்கள்’ என கூறியுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு தந்தை ஆசையுடன் துணி வாங்கி தருவதாக கூறியதால், மாதவி, சந்தீப் இருவரும் மகிழ்ச்சியுடன் துணிக்கடைக்கு பைக்கில் சென்றனர். மோகனாச்சாரியின் வருகைக்காக துணிக்கடை முன்பு இருவரும் காத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து பைக்கில் வந்த மோகனாச்சாரி, திடீரென தனது பையில் வைத்திருந்த கத்தியால் சந்தீப்பை வெட்டினார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மாதவி, அவரை தடுக்க முயன்றார். அவரையும், மோகனாச்சாரி சரமாரியாக வெட்டினார்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள், மோகனாச்சாரியை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் கத்தியை காட்டி மிரட்டிவிட்டு பைக்கில் தப்பிச்ெசன்றார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மாதவியின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால், மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்து எஸ்ஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மோகனாச்சாரியை கைது செய்தனர். போலீசாரிடம் மோகனாச்சாரி அளித்துள்ள வாக்குமூலம்: எனது எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களது திருமணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அவர்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

இதனால் துணி வாங்கி தருவதாக இருவரையும் துணிக்கடைக்கு வரவழைத்தேன். அவர்களும் அங்கு வந்து காத்திருந்தனர்.

அங்கு ெசன்ற நான், பையில் மறைத்து வைத்திருந்த இளநீர் வெட்டும் கத்தியால் சந்தீப்பையும், மாதவியையும் வெட்டினேன். அங்கிருந்தவர்கள் என்னை பிடிக்க முயன்றதால் அங்கிருந்து தப்பியோடிவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறியதாக ேபாலீசார் தெரிவித்தனர்.

.

மூலக்கதை