அணுசக்தி கமிஷன்புதிய தலைவர்!
அணுசக்தி கமிஷன் தலைவராக மூத்த விஞ்ஞானி கமலேஷ் நில்காந்த் வையாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக உள்ள சேகர் பாசுவின் பதவிக்காலம் நிறைவடைவதால், அணுசக்தி கமிஷன் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி கமலேஷ் நில்காந்த் வையாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனத்தை மத்திய அமைச்சரவையின் நியமன கமிட்டி அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா எம்.எஸ்.பல்கலைக் கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த கே.என்.வையாஸ், அணு சக்தித்துறையில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளதோடு, பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.