உத்தரப்பிரதேசத்தில் மர்ம காய்ச்சலுக்கு பலர் உயிரிழப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
உத்தரப்பிரதேசத்தில் மர்ம காய்ச்சலுக்கு பலர் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசத்தில் மர்மகாய்ச்சல் பரவி வருகிறது. இதில் பரெய்லியில் 24 பேர், படவுன் 23, ஹர்டோய் 12 பேர் இறந்தனர். இது தவிர மற்றும் சிட்டாப்பூர், பரெய்ச்சி, பிலிபிட், ஷாஜகான்பூர் போன்ற பகுதிகளிலும் பலர் உயிரிழந்தனர்.

மர்மகாய்ச்சல் உயிரிழப்பு குறித்து கணக்கெடுப்பு நடப்பதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங் தெரிவித்து உள்ளார். டாக்டர்கள் மூன்று குழுக்களாக சிகிச்சை அளிக்கின்றனர்,

போதுமான மருந்து, மாத்திரை வழங்கப்பட்டு, கொசு மருந்து அடித்து வருவதாக உயர்அதிகாரி பத்மகார்சிங் கூறியுள்ளார்.

 

மூலக்கதை