ஒடிசா அருகே உயிரை பணையம் வைத்து பாம்புடன் சண்டையிட்டு குட்டிகளை காப்பாற்றிய தாய் நாய்

தினகரன்  தினகரன்
ஒடிசா அருகே உயிரை பணையம் வைத்து பாம்புடன் சண்டையிட்டு குட்டிகளை காப்பாற்றிய தாய் நாய்

ஒடிசா: தன் குட்டிகளை காப்பாற்ற உயிரை பணையம் வைத்து பாம்புடன் சண்டையிட்ட தாய் நாயின் பாச போராட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒடிசாவில் விஜயப்பிரிட்டா என்பவரின் வீட்டு அருகே நாய் ஒன்று 7 குட்டிகளை பராமரித்து வந்துள்ளது. இந்நிலையில் அங்கு நுழைந்த பாம்பு ஒன்று குட்டிகளை சீண்டியது. அதனை கண்ட நாய் பாம்புடன் சண்டையிட்டு விரட்டியது. நாயின் சத்தத்தை கேட்டு அங்கு வந்த மக்கள் அந்த காட்சியை வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த சண்டையின் இறுதியில் நாயால் 5 குட்டிகளை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.  பின்னர் தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் பாம்பைப் பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

மூலக்கதை