மற்றொரு ஆணவ கொலை முயற்சி: தெலுங்கானாவில் பயங்கரம்

தினமலர்  தினமலர்
மற்றொரு ஆணவ கொலை முயற்சி: தெலுங்கானாவில் பயங்கரம்

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் மற்றொரு காதல் தம்பதியினரை மகளின் தந்தை வெட்டினார். இதன் மூலம் மற்றொர ஆணவகொலை முயற்சி நடந்துள்ளது அம்மாநில மக்களை மிரள வைத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் தெலுங்கானா மாநிலத்தின், நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த, இன்ஜினியரிங் பட்டதாரி, பிரணய் குமார், 23, ரியல் எஸ்டேட் தொழில் அதிபர், மாருதி ராவின் மகள், அம்ருதவர்ஷினி, 22 ஆகியோர், பெற்றோர் எதிர்ப்பை மீறி ரகசிய திருமணம் செய்து கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன் பிரணய் குமாரை மர்ம நபர் கொலை செய்து, தப்பிச் சென்றான். கொலைக்கு தன் தந்தை மற்றும் உறவினர்களுக்கு தொடர்பு இருப்பதாக, அம்ருதவர்ஷினி, போலீசாரிடம் தெரிவித்தார்.

ஐதராபாத்தைச் சேர்ந்த சந்தீப்பும் என்ற வாலிபரும் அதே பகுதியைச் சேர்ந்த நரசிம்மாச்சாரியின் மகள் மாதவியும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் மாதவியின் தந்தை நரசிம்மாச்சாரிக்கு பிடிக்கவில்லை. இவரின் எதிர்ப்பை மீறி கடந்த வாரம் புதன்கிழமை திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், இன்று காலை ஐதராபாத்தில் உள்ள சாந்தாநகர் பகுதிக்கு மகள் மாதவியையும் அவரது கணவருவன் புதுத்துணி எடுக்க வரவழைத்த நரசிம்மாச்சாரி, அவர்கள் அசந்த நேரத்தில், தான் மறைத்து வைத்திருந்த இளநீர் வெட்டும் அரிவாளால் மருமகன் சந்தீப்பை சரமாரியாக வெட்டினார், இதில் ரத்த வெள்ளத்தில் சந்தீப் சாய்ந்தார். இதைத் தடுக்க வந்த தனது மகள் மாதவியையும் வெட்டிச்சாய்த்துவிட்டு நரசிம்மாச்சாரி தப்பி ஓடினார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து நரசிம்மாச்சாரியை தேடி வருகின்றனர். இந்த ஆணவ கொலை முயற்சி தெலுங்கானாவாசிகளை மிரளவைக்கிறது.

மூலக்கதை