மங்களூருவில் குடிபோதையில் காவலர் தள்ளாட்டம்... சீருடையுடன் தள்ளாடிய வீடியோ காட்சிகள் வைரல்

தினகரன்  தினகரன்
மங்களூருவில் குடிபோதையில் காவலர் தள்ளாட்டம்... சீருடையுடன் தள்ளாடிய வீடியோ காட்சிகள் வைரல்

கர்நாடகா: கர்நாடக மாநிலம் மங்களூருவில் சீருடையுடன் குடி போதையில் போக்குவரத்து போலீசார் ஒருவர் தள்ளாடி வருகிற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மங்களூரு நகர் மேற்கு போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலராக அசோக் கவுடா பணியாற்றி வருகிறார். இவர் மது அருந்திவிட்டு லால்பாக் என்ற இடத்தில் போக்குவரத்தை சரி செய்யம் பணியில் ஈடுபட்டுள்ளார். போதை தலைக்கு ஏறியதால் நிதானத்தை இழந்த காவலர் சாலையில் தள்ளாடினார். மது போதையில் ஆட்டம் போட்ட காவலரை பொதுமக்கள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று சாலையோரம் அமர வைத்தனர். தகவல் அறிந்து வந்த போலீஸ் அதிகாரிகள் அசோக் கவுடாவை சம்பவ இடத்திலிருந்து அழைத்துச்சென்றனர்.

மூலக்கதை