ரயில் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: ரயில்வே பொது மேலாளர் பேச்சு
சென்னை: ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று சென்னை அயனவரத்தில் ரயில்வே பாதுகாப்பு படையின் எழுச்சி நாள் விழாவில் பொது மேலாளர் குல்ஸ்ரீஸ்தா கூறியுள்ளார். மேலும் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக பெண் காவலர்கள் அடங்கிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தெற்கு மண்டலத்தின் 176 ரயில் நிலையங்களில் ரூ.72 கோடியில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.