பரிஸ் - நூலகத்தில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!!
பரிஸ் இருபதாம் வட்டாரத்தில் பெண் ஒருவரின் சடலம் நூலகம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை நண்பகலுக்கு பின்னதாக சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள மாநகர நூலகத்தில் இருந்து இப்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெண் முழு நிர்வாணமாக்கப்பட்டு கிடந்துள்ளார். அவரின் ஆடைகள் ஒரு கதிரையில் மடித்து வைக்கப்பட்டிருந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அப்பெண்ணின் சடலத்தை முதலில் துப்பரவு பணியாளர் ஒருவரே கண்டதாகவும், அதன் பின்னர் நிர்வாகியிடம் அறிவிக்கப்பட்டு, காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அறியமுடிகிறது.
சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக Forensic Institute க்கு அனுப்பப்பட்டுள்ளது. கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.