யாழில் இனந்தெரியாத கும்பல் அட்டகாசம்! 5 பேருக்கு ஏற்பட்ட நிலை

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் இனந்தெரியாத கும்பல் அட்டகாசம்! 5 பேருக்கு ஏற்பட்ட நிலை

யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் புகுந்து கும்பல் ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 
யாழ்ப்பாணம், தென்மராட்சி கைதடிப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
படுகாயமடைந்தவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இச் சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
 
“கைதடி ஏ-9 நெடுஞ்சாலையிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 15 இற்கும் மேற்பட்ட நபர்கள், பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் கூரிய ஆயுதங்களால் வீட்டிலுள்ளவர்களைத் தாக்கியும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
சம்பவத்தில் 5 பேர் படுகாயமடைந்தவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
தாக்குதலை நடத்தியவர்கள் முகத்தை துணியால் மறைத்துக் கட்டியிருந்தனர் என்று முறைப்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
உறவினர்களுக்கு இடையேயான தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. 
 
குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை