கருணாநிதி தாயார் நினைவிடத்தில் டி.ஆர்.பாலு மாலை அணிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கருணாநிதி தாயார் நினைவிடத்தில் டி.ஆர்.பாலு மாலை அணிவிப்பு

திருவாரூர்: திமுகவின் முதன்மை செயலாளராக பொறுப்பேற்றுள்ளதை அடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் டி. ஆர். பாலு திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் அங்குள்ள கருணாநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் உள்ளிட்டோரின் உருவ படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கட்சியின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ். இளங்கோவன், மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் தலையாமங்கலம் பாலு, விவசாய தொழிலாளர் அணியின் மாநில துணை செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

.

மூலக்கதை