மத்திய, மாநில அரசை கண்டித்து கம்யூனிஸ்ட், ஏஐடியூசி பிரசாரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய, மாநில அரசை கண்டித்து கம்யூனிஸ்ட், ஏஐடியூசி பிரசாரம்

கும்மிடிப்பூண்டி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில், நேற்று முதல் தமிழகத்தின் 6 முனைகளில் இருந்து திருப்பூரை நோக்கி பிரசார பேரியக்கத்தை துவக்கியுள்ளனர். இதன்படி தமிழக-ஆந்திர எல்லையான கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் துவங்கிய தீவிர பிரசார பேரியக்கத்துக்கு ஏஐடியூசி மாநில பொதுச்செயலாளர் டி. எம். மூர்த்தி தலைமை தாங்கினார்.

கும்மிடிப்பூண்டி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் அருள் வரவேற்றார்.

  தென்சென்னை மாவட்ட கம்யூனிஸ்ட் செயலாளர் ஏழுமலை, மாதர் சங்க மாநில தலைவர் சுசீலா, ஏஐடியூசி மாநில செயலாளர் ராதாகிருஷ்ணண், பாரதி, ஆந்திராவின் நெல்லூர் மாவட்ட ஏஐடியூசி செயலாளர் சுதாகர், முன்னாள் எம்எல்ஏ ஏ. எஸ். கண்ணன், மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாநில கம்யூனிஸ்ட் நிர்வாக குழு உறுப்பினர் த. லெனின், மாநில நிர்வாகி லெனின், எழில் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

.

மூலக்கதை