செந்தனியில் துப்பாக்கிச்சூடு! - 15 வயதுடைய சிறுவன் பலி! - மேலும் சிலர் காயம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
செந்தனியில் துப்பாக்கிச்சூடு!  15 வயதுடைய சிறுவன் பலி!  மேலும் சிலர் காயம்!!

செந்தனியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 15 வயதுடைய சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். 
 
பண கொடுக்கல் வாங்கல் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, திங்கட்கிழமை இரவு 8.30 மணி அளவில் தொண்டையில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவன் வீதியில் இருந்து மீட்கப்பட்டான்.  இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இதில் மேலும் இருவர் காயமடைந்தனர். 
 
காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செந்தனி நகர காவல்துறையினர் சம்பவ இடத்தை முழுமையாக ஆராய்ந்து தடயங்களை சேகரித்துள்ளனர். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. 

மூலக்கதை