40 மீற்றர் ஆழத்தில் துப்பரவு பணி பார்த்த இருவர் பலி!!
நேற்று திங்கட்கிழமை Yvelines இல் இரு நபர்கள் பலியாகியுள்ளனர். 40 மீற்றர் ஆழத்தில் துப்பரவுபணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவரே பலியாகியுள்ளனர்.
திங்கட்கிழமை இரவு Montesson (Yvelines) பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் குழாய் ஒன்றை திருத்தும் பணியில் இருவர் ஈடுபட்டிருந்தனர். நிலத்தில் இருந்து 40 மீற்றர்கள் ஆழத்தில் இந்த திருத்தப்பணி இடம்பெற்றுக்கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென குளோரிதிக் அமிலம் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்களால் விரைவாக வெளியேறமுடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இதனால் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தீயணைப்பு படையினர் இரு சடலங்களையும் மீட்டுள்ளனர். அவர்கள் இருவரும் 53 மற்றும் 57 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.