இலங்கையில் பரிதாபமாக பலியான 5 யானைகள்! பொது மக்கள் செய்த மோசமான செயல்

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கையில் பரிதாபமாக பலியான 5 யானைகள்! பொது மக்கள் செய்த மோசமான செயல்

 

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த எரிபொருள் ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி 5 யானைகள் உயிரிழந்துள்ளன.
 
இந்த விபத்து ஹபரனை – பலுகஸ்வெவ தொடருந்து நிலையங்களுக்கு இடையில் 127வது கிலோமீற்றர் கட்டைக்கு அருகில் இன்று அதிகாலை நடந்துள்ளது.
 
விபத்தில் தொடருந்து தடம்புரண்டுள்ளது. யானைகள் 5 உடல் சிதறி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
யானைகளுடன் மோதி ரயில் தடம்புரண்டது. இதன் போது எரிபொருள் ஏற்றிச் சென்ற தொடருந்தின் தாங்கியிலிருந்து வெளியேறிய டீசலைப் போத்தல்கள், வாளிகளில் மக்கள் பரபரப்பாகச் சேகரித்து வருகின்றனர்.
 
யானைகள் பரிதாபமாக பலியாகியுள்ள நிலையில், பொது மக்களின் இந்த செயல் கடும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.



 
 

 

மூலக்கதை