மெட்வத் சர்வதேச மல்யுத்தப் போட்டி: வெள்ளி வாங்கினார் சாக்ஷி மாலிக்
பெலாரஸ்: பெலாரஸில் நடைபெற்ற மெட்வத் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க வீராங்கனையான சாக்ஷி மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்றார். மின்ஸ்க் நகரில் சர்வதேச மல்யுத்தப் போட்டி நடந்து வருகிறது.
இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கு இந்தியா சார்பில் வீரர்கள் சென்றுள்ளனர். நேற்று நடந்த போட்டி ஒன்றில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற வீராங்கனையான சாக்ஷி மாலிக் இந்தியா சார்பில் பங்கேற்றார்.
62 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற சாக்ஷி இறுதி ஆட்டத்தில் ஹங்கேரி நாட்டை சேர்ந்த மரியன்னா சாஸ்டினிடம் 2-6 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தார்.
இதனால் சாக்ஷிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 57 கிலோ எடைப் பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனையான பூஜா தண்டா, வெண்கலப்பதக்கம் வென்றார்.
இந்த நிலையில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.