பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மருத்துவமனையில் ‘அட்மிட்’

தமிழ் முரசு  தமிழ் முரசு
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மருத்துவமனையில் ‘அட்மிட்’

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ெடல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   பீகார் மாநிலத்தில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜ கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, முதல்வராக இரண்டாவது முறையாக நிதிஷ்குமார் பதவி வகித்து வருகிறார்.

இவருக்கு, இன்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து, முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘முதல்வர் நிதிஷ்குமாருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான், எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை