காங்கிரஸ் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடக்கிறது: மாவட்ட தலைவர் வீரபாண்டியன் அறிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
காங்கிரஸ் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடக்கிறது: மாவட்ட தலைவர் வீரபாண்டியன் அறிக்கை

சென்னை: சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் சென்னையில் திருநாவுக்கரசர் தலைமையில் இன்று மாலை நடக்கிறது.
இது குறித்து சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் சென்னை திருமங்கலம் தந்தை பெரியார் சமூக நலக்கூடத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கசரசர் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.

இதில் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத், ஜெயக்குமார், செல்லக்குமார்,

 யசோதா, முன்னாள் எம்பி ஹாரூண், விஸ்வநாதன், கே. ராணி, வசந்தகுமார் எம்எல்ஏ, செல்வபெருந்தகை, தணிகாசலம், தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்கும் தலைவர்களுக்கு மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், புலி ஆட்டங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாலை 4 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் காங்கிரசார் பெருமளவில் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை