சதி செய்த ராகுல், சோனியா: சுப்பிரமணியன் சாமி

தினமலர்  தினமலர்
சதி செய்த ராகுல், சோனியா: சுப்பிரமணியன் சாமி

புதுடில்லி : நேஷனர் ஹெரால்டு விவகாரத்தில் காங்., தலைவர் ராகுல் மற்றும் அவரின் தாயார் சோனியா இருவரும் பல்வேறு சதி, மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து தான் தொடர்ந்த வழக்கில், டில்லி கோர்ட்டில் நீதிபதி சமர் விஷால் முன்பு ஆஜராகிய சுப்பிரமணியன் சாமி அளித்த வாக்குமூலம்: யங் இந்தியா நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் ராகுலுக்கும், சோனியாவுக்கும் சொந்தமாக உள்ளது. அந்நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் அவர்களிடமே உள்ளன.

இதனை பயன்படுத்தி அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முறைகேடாக இருவரும் அபகரித்துள்ளனர். இதற்காக இருவரும் பல்வேறு சதி, மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மூலக்கதை