ரூபாய் நோட்டு வாபஸ் மிகப்பெரிய ஊழல்: ராகுல்

தினமலர்  தினமலர்
ரூபாய் நோட்டு வாபஸ் மிகப்பெரிய ஊழல்: ராகுல்

போபால் : 'ரூபாய் நோட்டு வாபஸ் தான், மோடி அரசின் மிகப்பெரிய ஊழல்' என காங்., தலைவர் ராகுல் குற்றம் சாட்டினார்.

ம.பி.,யில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் சட்டசபை தேர்தலையொட்டி, ராகுல் நேற்று(17ம் தேதி) தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். போபாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: மோடி அரசின் மிகப்பெரிய ஊழல் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை தான். இத்திட்டம் பணக்காரர்கள் தங்களின் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற உதவியது. சிறு, குறு தொழில்புரிவோரின் பணத்தை பறித்து, பெரும் பணக்காரர்களின் சட்டை பையில் போடுவதே இத்திட்டத்தின் நோக்கம்.

15 பெரு நிறுவனங்களின் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனை ரத்து செய்த மோடி அரசு, ரூ.5,000 கடன் வாங்கிய விவசாயிகளின் கடனை ரத்து செய்யவில்லை. மத்தியில் காங்., ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் ஒட்டுமொத்த கடன்களும் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை