படிச்சிருக்கலாமோ என்று வருத்தப்பட்டேன் - யோகி பாபு

PARIS TAMIL  PARIS TAMIL
படிச்சிருக்கலாமோ என்று வருத்தப்பட்டேன்  யோகி பாபு

 யோகி பாபு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன் ஆகிவிட்டார். கதாநாயகனாக நடிக்கிறார் என்று செய்தி வந்தபோது அதை மறுத்தார். ஆனால் கூர்கா என்னும் படத்தில் கதையின் நாயகனாக நடிப்பது உறுதியாகி உள்ளது. 

 
யோகிபாபு நடிப்பில் அடுத்து பரியேறும் பெருமாள் படம் வர இருக்கிறது. கதிர், ஆனந்தி இருவரும் நாயகன் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் படம் உருவான விதத்தோடு யோகி பாபு படம் பற்றிய தனது கருத்துகளையும் கூறியுள்ளார். 
 
 
 
“நான் பத்தாவது வரை தான் படித்துள்ளேன். இந்தப் படத்தில் கல்லூரி மாணவனாக நடித்தது மறக்க முடியாத அனுபவம். 32 நாட்கள் கல்லூரியிலே வலம் வந்தது நானும் படித்திருக்கலாமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. காமெடி காட்சிகள் மட்டுமல்லாமல் உணர்வுபூர்வமான காட்சிகளிலும் நடித்துள்ளேன். நடித்து முடித்து மானிட்டரைப் பார்க்கும்போது எனக்கும் இத்தகைய காட்சிகளில் நடிக்க வருகிறதே என்று நினைத்தேன். மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தத் திரைக்கதையை உருவாக்கியிருப்பார் என நினைக்கிறேன். நெல்லை மக்கள் வீரமாகவும், பாசமாகவும் உள்ளனர். 
 
படப்பிடிப்பின்போது அவர்களோடு பழக வாய்ப்பு கிடைத்தது. படத்தை பார்த்துவிட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நன்றாக நடித்துள்ளீர்கள் என்று கட்டிப்பிடித்து பாராட்டினார்” என்று யோகி பாபு கூறி உள்ளார். செப்டம்பர் 28-ஆம் தேதி பரியேறு பெருமாள் திரைப்படம் வெளியாக இருக்கிறது

மூலக்கதை