சத்தம் அதிகமாக வைத்து பாடல் கேட்ட இளைஞன் - படுகொலை!!

PARIS TAMIL  PARIS TAMIL
சத்தம் அதிகமாக வைத்து பாடல் கேட்ட இளைஞன்  படுகொலை!!

நேற்று முன்தினம் சனிக்கிழமை 19 வயதுடைய இளைஞன் ஒருவன் படுகொலை செய்யப்பட்டுள்ளான். சத்தம் அதிகமாக வைத்து பாடல் கேட்டதால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர் இக்கொலையை செய்துள்ளார். 
 
Nord மாவட்டத்தின் Lomme நகரில் உள்ள குறித்த இளைஞனது வீட்டில் சனிக்கிழமை காலை 7 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞன் எப்போதும் போல் சத்தமாக பாடல் ஒலிக்கவிட்டுள்ளான். இதனால் தொடர்ச்சியாக சிரமத்துக்கு ஆளான பக்கத்தில் வசிக்கும் 30 வயதுடைய நபர் ஒருவர் காலை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளர். வாக்குவாதம் அதிகரிக்க, ஆத்திரமடைந்த நபர் இளைஞனை தாக்கியுள்ளார். இளைஞனது மார்பில் கத்தியால் நான்கு தடவைகள் குத்தியுள்ளார். 
 
வீட்டுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த  இளைஞனை அவனது காதலி முதலில் கண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் கொலையாளியை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

மூலக்கதை