தொடரூந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக இளம் பெண் புகார்!!

PARIS TAMIL  PARIS TAMIL
தொடரூந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக இளம் பெண் புகார்!!

பரிஸ் - Rambouillet நகரங்களுக்கிடையே பயணிக்கும் தொடரூந்தில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். 
 
கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றதாக 16 வயதுடைய இளம் பெண் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு Essarts-le-Roi தொடரூந்து நிலையத்தில் இருந்து குறித்த இளம் பெண் மயங்கிய நிலையில் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டிருந்தார். பின்னர் Rambouillet மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்து, சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். பின்னர் குறித்த இளம் பெண், தான் மொம்பர்னாஸ் நிலையத்தில் இருந்து வருவதாகவும், தாம் மது உட்கொண்டிருந்ததாகவும், Trappes நிலையத்தை தொடரூந்து நெருங்கும்போது சிலர் என்னை சுற்றி வளைத்தார்கள். அதில் ஒருவன் என்னை பாலியல் பலாத்காரம் செய்தான்!' என தெரிவித்துள்ளார். 
 
விசாரணைகளை Rambouillet நகர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த இளம் பெண் Trappes நகரில் வசிப்பதாகவும், அங்கு இறங்க முற்பட்ட வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், தாம் Rambouillet நகருக்கு வந்தது தொடர்பாக எதுவும் நினைவில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். அப்பெண்ணின் பெற்றோர்கள் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டனர். 

மூலக்கதை