உயர்கல்வி படிக்க பிளஸ்-2 மதிப்பெண் மட்டும் போதும்! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

உயர்கல்வி படிக்க பிளஸ் 2 மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். அமைச்சர் செங்கோட்டையன் நிருப.ர்களிடம் கூறியதாவது:  “நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கும், ஜேஇஇ எனப்படும் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கும் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே முதல்முறையாக நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தான் அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 10, 11 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களது மன அழுத்தத்தைப் போக்கும் வகையில், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் ஆயிரத்து 200 மதிப்பெண்கள் என்ற முறையை மாற்றி ஒவ்வொரு வகுப்பிலும் தலா 600 மதிப்பெண்களாக பிரித்து தேர்வெழுதும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பிளஸ் 1 தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற வேண்டும். எனினும், வரும் கல்வியாண்டு முதல் பிளஸ் 2 தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர்கள் உயர்கல்வியில் சேரலாம். அந்த வகையில் அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதில் மாற்றமில்லை. அதில், அவர்கள் தோல்வியுற்றால் மீண்டும் தேர்வெழுத வாய்ப்புகள் வழங்கப்படும். ஆனால், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே உயர் கல்வியில் சேரலாம். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன்  கூறினார்.

உயர்கல்வி படிக்க பிளஸ் 2 மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் நிருப.ர்களிடம் கூறியதாவது:

 “நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கும், ஜேஇஇ எனப்படும் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கும் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே முதல்முறையாக நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தான் அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

10, 11 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களது மன அழுத்தத்தைப் போக்கும் வகையில், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் ஆயிரத்து 200 மதிப்பெண்கள் என்ற முறையை மாற்றி ஒவ்வொரு வகுப்பிலும் தலா 600 மதிப்பெண்களாக பிரித்து தேர்வெழுதும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

பிளஸ் 1 தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற வேண்டும். எனினும், வரும் கல்வியாண்டு முதல் பிளஸ் 2 தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர்கள் உயர்கல்வியில் சேரலாம். அந்த வகையில் அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதில் மாற்றமில்லை. அதில், அவர்கள் தோல்வியுற்றால் மீண்டும் தேர்வெழுத வாய்ப்புகள் வழங்கப்படும். ஆனால், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே உயர் கல்வியில் சேரலாம்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன்  கூறினார்.

மூலக்கதை