கோர விபத்தில் பலர் பலி - இருவர் காயம்! வவுனியாவில் சம்பவம்
வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் ற்பட்ட விபத்தில் நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புகையிரத்துடன் கார் மோதுண்டமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரத்துடன் சிறிய கார் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் மோதுண்டே விபத்து ஏற்பட்டுள்ளது.
காரில் பயணித்த 8 பேரில் 4 பேர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளனர்.
இருவர் படு காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுவன் ஒருவரும் காரின் சாரதியும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே காரில் இருந்து பாய்ந்து உயிர் தப்பியுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.