கந்துவட்டி கொடுமையால் தற்கொலைக்கு அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு
கடலூர் : நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்தக்காரர் ஆராவமுதன் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாங்கிய கடனுக்கு வட்டியும் அசலும் கட்டிய பின்பும் வடிவேல் என்பவர் மிரட்டுவதாக கூறப்படுகிறது. கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆராவமுதன் தற்கொலைக்கு அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு அளித்தார்.