ரூ.45 லட்சம் மோசடி புகாரில் போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது
சென்னை: தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.45 லட்சம் மோசடி செய்த புகாரில் போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். பணமோசடி புகாரில் போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி நவாப்பன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.