லா சப்பல் பகுதியில் பல்வேறு தாக்குதல்கள்! - பலர் காயம்! - ஒரே இரவில் நான்கு சம்பவங்கள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
லா சப்பல் பகுதியில் பல்வேறு தாக்குதல்கள்!  பலர் காயம்!  ஒரே இரவில் நான்கு சம்பவங்கள்!!

திங்கட்கிழமை இரவு, பரிஸ் லா சப்பல் பகுதியில் வசிக்கும் அகதிகள் மீது பல்வேறு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. 
 
முதலில் திங்கட்கிழமை 19 மணி அளவில் Place de la Chapelle இல் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். காது மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் மயங்கி கிடந்துள்ளார். தாக்குதல் மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றுள்ளார். பின்னர் காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
 
பின்னர், பத்து நிமிடங்கள் கழித்து Boulevard de la Chapelle, rue Caillé இல் நபர் ஒருவர் முழங்கால் மற்றும் தொண்டை பகுதியில் கத்தியால் வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டார். பின்னர் நள்ளிரவு கடந்து .
0h 35 மணிக்கு rue de la Chapelle பகுதியில் குழு மோதல் வெடித்துள்ளது. இதில் பல்வேறு அகதிகளுக்குள் மோதல் வெடித்து கத்திக்குத்து தாக்குதலும் இடம்பெற்றிருந்தது. இதில் ஒரு அகதிக்கு வாய் உடைக்கப்பட்டு இரத்தம் வெளியேறிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
 
பின்னர் அதிகாலை 4.20 மணி அளவில் porte de Pantin பகுதியில் நான்காவது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் மூன்று அகதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். கண்ணாடி போத்தல்கள் உடைக்கப்பட்டு அதன் மூலம் தாக்கிக்கொண்டனர். இதில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மூன்றாம் நபர் தப்பிச் சென்றுள்ளார்.

மூலக்கதை